வவுனியாவில் கொட்டும் மழையிலும் களைகட்டும் நத்தார் வியாபாரம்!
வவுனியாவில் கொட்டும் மழையிலும் நத்தார் பண்டிகை வியாபாரம் களை கட்டியுள்ளது.
உலகம் பூராவும் இயேசுவின் பிறந்தநாளை கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் வவுனியாவிலும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள், கிறிஸ்மஸ் மரங்களையும் மக்கள் வேண்டிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
