இளம் சமையல்கலைஞர் ஒலிம்பியாட் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகரம்
2வது இளம் சமையல்கலைஞர் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ரூமிரா பியாசிறி இன்று (08) காலை நாட்டை வந்தடைந்தார்.
கடந்த மாதம் 1 முதல் 6 ஆம் திகதி வரை இந்தியாவின் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 50 நாடுகளைச் சேர்ந்த சமையல்கலைஞர் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இது இந்தியாவின் சர்வதேச ஹோட்டல் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் லண்டனில் உள்ள சர்வதேச விருந்தோம்பல் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர் சமையல்கலைஞர்களுக்கான உலகின் மிகப்பெரிய உலகளாவிய சமையல் போட்டி என்பதிலும் இது தனித்துவமானது.
