;
Athirady Tamil News

18 வருட விசாரணையின் பின் இலங்கையில் மூவருக்கு கிடைத்த அதிரடி தண்டனை

0

வஸ்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள மரணவீட்டில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மூன்று பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குடாவஸ்கடுவ, லிட்டில்டன்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்களான சுரேஷ் குமார, ‘ராலஹாமி’ என்ற புனைப்பெயரால் அறியப்படும் சுகத் குமார மற்றும் ‘பெட்டா’ என அழைக்கப்படும் சமித சிசிர குமார ஆகிய மூவராவர்.

மரண தண்டனை
2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த ஒரு திகதியில் இந்த குற்றம் இடம்பெற்றுள்ளதுடன், குடாவஸ்கடுவ லிட்டில்டன்வத்தையைச் சேர்ந்த சமிந்த குமார என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்தமை தொடர்பில் சட்டமா அதிபரால் இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

18 வருட காலமாக நடைபெற்ற இந்த நீண்ட வழக்கு விசாரணையின் போது, முறைப்பாட்டுத் தரப்பால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் மற்றும் சாட்சியங்கள் மூலம் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி தீர்மானித்தார்.

அதன்படி, மூன்று பிரதிவாதிகளும் குறித்த கொலைக்கு குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.