வடமாகாணத்திற்கு 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் அன்பளிப்பு
;
இத்திட்டத்தின் கீழ், மாகாணத்தில் உள்ள 55 பிரதேச மருத்துவமனைகள் மற்றும் 48 ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலையங்கள் என மொத்தம் 103 மருத்துவ நிலையங்களுக்கும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாது நிலையங்கள் உள்ளிட்ட 709 பிரிவுகளுக்கும் இந்தக் கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இதற்கமைவாகவே குறித்த 750 அட்டவணைகளும் விஷன் கெயார் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாகப் பின்தங்கிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஏதுவான பயிற்சிகள் உரிய தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளதாக கண் சத்திர சிகிச்சை நிபுணர் எம்.மலரவன் இதன்போது குறிப்பிட்டார்.
விஷன் கெயார் நிறுவனம் தமது சமூகப் பொறுப்புணர்வுச் செயற்றிட்டத்தின் கீழ் இப்பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கண் சத்திர சிகிச்சை நிபுணர் எம்.மலரவன் மற்றும் விஷன் கெயார் நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.