;
Athirady Tamil News

ஆயுதங்களுடன் முன்னாள் எம்பி அதிரடியாக கைது

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரி ஆராச்சி ஆயுதங்களுடன், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரீ – 56 ரக இரண்டு மெகசீன்கள், அதற்கான 221 தோட்டாக்கள் மற்றும் கைகுண்டு ஒன்றும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிடியாணை ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, குறித்த ஆயுதங்களுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரி ஆராச்சி இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.