;
Athirady Tamil News

ஜூலை முதலாம் திகதிக்குள் பதிவு கட்டாயம் – வெளிவந்துள்ள அறிவிப்பு

0

நாட்டின் அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் இந்த நடவடிக்கை கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்வு
முன்பள்ளி கல்விக்கான வேலைத்திட்டம் அமைச்சின் பாடப்பரப்பிற்கு அமைய எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் மாத்தறை மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் ஒரு முன்பள்ளியை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதனைப் பதிவு செய்வது கட்டாயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.