;
Athirady Tamil News

படை பலங்களோடு முதலமைச்சர் பதவியைப் பெற விரைந்த விஜய்..

0

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாதுகாப்பு கான்வாய் வாகனங்களுடன் நீலாங்கரை வீட்டிலிருந்து நேரு அரங்கினை நோக்கிப் புறப்பட்டுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜயும், அவருடைய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.

விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பிற்காக 6 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சாலையோரங்களில் நின்று மக்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விஜயின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, இந்திய பராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்னைக்கு வருகைத் தந்துள்ளார்.

இந்தநிலையில், தன்னுடைய மகனின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ள விஜயின் பெற்றோர், தாம் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதாக அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.