;
Athirady Tamil News

24 மணிநேரம்… நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிசய குழந்தை; வைரலான வீடியோ

0

காரகாஸ்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி, பிறந்து 18 நாளேயான குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலையில் ஒரு நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் குலுங்கின.


2-வது நிலநடுக்கம்
ரிக்டர் அளவுகோலில் முதலில் 7.1 என்ற அளவிலும், பின்னர் 7.5 என்ற அளவிலும் இரு நிலநடுக்கங்கள் கடுமையாக தாக்கின. 2-வது நிலநடுக்கம் நிலப்பரப்பின் மேற்பகுதிக்கு அருகே (10 கி.மீ. ஆழம்) ஏற்பட்டது பெரும் பாதிப்புக்கான காரணியாகி விட்டது. இதனால், தலைநகர் காரகாஸ் உள்பட பல்வேறு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கட்டிடங்கள் தரைமட்டமானதில், ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 900-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் காயமடைந்தும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

அதிசய குழந்தை
இந்த கட்டிட இடிபாடுகளில் 24 மணிநேரத்திற்கும் மேலாக சிக்கிக்கொண்ட, பிறந்து 18 நாட்களேயான குழந்தை ஒன்று, உயிர் தப்பிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. மீட்பு குழுவினர் தொடர்ந்து நடத்திய தேடுதல் மற்றும் மீட்பு பணியில், அந்த குழந்தையை கண்டறிந்தனர்.

இதன்பின்பு குழந்தையை மீட்டு அதன் தந்தையிடம் ஒப்படைத்தனர். அதனுடன் நில்லாமல், தொடர்ந்து இடிபாடுகளை மீட்பு குழுவினர் அகற்றினர். இதில், ஒன்றரை மணிநேரத்திற்கு பின்னர் குழந்தையின் தாயாரும் மீட்கப்பட்டார். அவர்கள் இருவரும் உடல்நலத்துடன் உள்ளனர். குழந்தையை மீட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.