;
Athirady Tamil News

காங்கோவில் தீவிரமடையும் எபோலா : பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது

0

கின்ஷாசா,

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும்.

2 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
இந்நிலையில், காங்கோவில் 4,381 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 2,011 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 704 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.