தமிழ்த்தேசியப் பேரவையினர் புங்குடுதீவு மடத்துவெளியில் மேற்கொண்ட நற்செயல்
தமிழ்த்தேசியப் பேரவையினர் புங்குடுதீவு மடத்துவெளியில் மேற்கொண்ட நற்செயல்
தமிழ்த்தேசியப் பேரவையின் அங்கத்துவ கட்சியாகிய ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதி செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஒழுங்கமைப்பில்
புங்குடுதீவு மடத்துவெளி சனமூக நிலையத்திலிருந்து வாணர் பாலம் வரை காணப்படுகின்ற 28 வீதி மின்விளக்குகள் வேலணை பிரதேச சபையினரின் ஒத்துழைப்புடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கான நிதியுதவியாக திரு. கருணாகரன் நாவலன் ரூபாய் 40000, மடத்துவெளி சிறீ முருகன் கடற்தொழிலாளர் சங்கத்தின் முன்னைநாள் செயலாளர் திரு. வி. சிவரூபன் 20000 ரூபாயினையும் வழங்கியிருந்தனர்.
