;
Athirady Tamil News

இலங்கையின் மூத்த கலைஞர் தயா நெல்லம்பிட்டிய காலமானார்

0

இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய தமது 91 வயதில் காலமானார்.

களுபோவிலையில் உள்ள தனது இல்லத்தில் இவ்வாறு காலமானதாக குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதிச் சடங்குகள்
நாட்டின் பல முன்னணி பாடசாலைகளில் நீண்டகாலமாக நடன ஆசிரியையாக பணியாற்றிய தயா நெல்லம்பிட்டிய, ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு கண்டி பாரம்பரிய நடனத்தைக் கற்பித்த ஒரு சிறந்த ஆசிரியையாகவும் கருதப்படுகின்றார்.

பாடகரான சேன பொன்சேகாவின் மனைவியான இவர், தற்போதைய இலங்கை கலைத்துறையில் உள்ள பல மூத்த கலைஞர்களின் ஆரம்பகால ஆசிரியையுமாவார்.

இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை, நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனக் கலையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்குக் கையளிப்பதற்காக அவர் ஆற்றிய சேவை ஈடு இணையற்றதாகும்.

அவரது இறுதிச் சடங்குகள் நாளை (15) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.