;
Athirady Tamil News

வேலணை கோட்டக் கல்வி விளையாட்டு போட்டி 2023!! ( படங்கள் இணைப்பு )

வேலணை கோட்ட கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வன்மை திறனாய்வு போட்டி அண்மையில் வேலணை கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு. கா. சசிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது . பிரதம விருந்தினராக திரு . சி. சபா ஆனந் ( யாழ்…

உக்ரைனை தொடர்ந்து சுவீடனும் நேட்டோவில் இணைய துருக்கி அதிபர் பச்சைக்கொடி!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதில் இருந்து அண்டை நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுவதில் கவனம் செலுத்தி வருகின்றன. உக்ரைன் நேட்டோ படையில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டதால்தான், ரஷியா போர் தொடுக்க முக்கிய காரணம் என சொல்லப்பட்டது.…

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வந்தார் !!

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இன்று உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்தார். ஜூலை 20 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதுடில்லி விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை குவாத்ரா மேற்கொள்வார் என…

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு !!

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமிழ் நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு…

கேரளாவில் அமீபாவால் அச்சுறுத்தல்- அபூர்வ மூளை தாக்குதல் நோய்க்கு மேலும் ஒரு சிறுவன் பலி!!

கேரளாவில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவது அம்மாநில மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், அமீபாவால் பரவும் பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற அபூர்வ நோய் தாக்குதல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தேங்கி…

வட அமெரிக்காவில் தமிழ் அறிஞருக்காக நிறுவப்படவுள்ள முதலாவது நினைவுச் சின்னம் !!

கனேடிய தமிழர் பேரவை, கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள பெடெக் நகரத்தில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர் ஜி.யு. போப் அவர்களைக் கௌரவிக்கும் உருவச் சிலையை திறந்துவைக்கவுள்ளது. கனேடிய மண்ணின் முதல் தமிழறிஞரான ஜி.யு போப் அவர்களுக்கு அவரது பிறந்த…

வெள்ளத்தால் சுடுகாட்டுக்கு கொண்டுச்செல்ல முடியவில்லை- சாலையில் தகனம் செய்யப்பட்ட காங்கிரஸ்…

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சக்குளத்துகாவு பகுதியை சேர்ந்தவர் குஜூன்மோன்(வயது72). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் அப்பகுதியில் பூத் தலைவராக உள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில்…

பிரிகோஜினை ரகசியமாக சந்தித்த புடின் – 3 மணிநேர கலந்துரையாடலின் பின் எடுக்கப்பட்ட…

ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குப் பின் வாக்னர் கூலிப்படைத் தலைவரை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் குழுவினர் திடீரென புடினுக்கே எதிராக திரும்பிய விடயம் பெரும்…

தடையை மீறி, டெல்லி மெட்ரோ நடைமேடையில் நடனமாடிய பெண்- சமூக வலைதளங்களில் கண்டனம் குவிகிறது!!

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் சமீபகாலமாக பயணிகளின் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு, பல்வேறு அறிவுரைகள் வழங்கிய பின்னரும், அதை யாரும்…

பார்கின்சன் நோயை கணிக்கும் ஸ்மார்ட் கடிகார தொழிநுட்பம் !!

ஸ்மார்ட் கடிகாரம் மூலம் பார்கின்சன் எனும் நடுக்குவாத நோய் வருவதற்கான அறிகுறிகளை 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரித்தானியாவில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டிமென்ஷியா ஆய்வு நிறுவனம்…

திருவனந்தபுரம் அருகே இன்று கடலில் படகு கவிழ்ந்து 4 மீனவர்கள் மூழ்கினர்- ஒருவர் பலி!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய போதிலும், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து…

உக்ரைனுக்கு முட்டுக்கட்டையாக மாறிய அமெரிக்கா !!

லிதுவேனியாவில் ஜீலை நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) நேட்டோ மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் போருக்கு நடுவே உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அத்துடன், கூட்டமைப்பின்…

2 நாட்கள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடி 13-ந்தேதி பிரான்ஸ் செல்கிறார்!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 14-ந்தேதி அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று…

சீனாவில் பள்ளியில் கத்திக்குத்து- 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி!!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில், 3 குழந்தைகளும் அடங்குவர். மீதமுள்ள பலியானவர்களில் ஒருவர் ஆசிரியர் என்றும் மற்றும் 2 பேர் பெற்றோர்கள்…

திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்: ஒரு பக்தருக்கு 4 லட்டு மட்டுமே விநியோகம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்த பிறகு பக்தர்களின் கூட்டம் ஓரளவு குறைந்து காணப்பட்டது. ஆனால் வார இறுதி விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை…

சூடான் உள்நாட்டு போர் இன்னும் தீவிரமடையும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை!!

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவ அமைப்பான ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (Rapid Support Forces) இடையில் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையை நிறுத்துவதற்கான பல்வேறு ராஜதந்திர முயற்சிகள் இதுவரை…

திருச்சூரில் நிலஅதிர்வு: பொதுமக்கள் அச்சம்!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருச்சூர் மற்றும் சுற்றுவட்டார…

மூளைக்கு 5 நிமிடம் ஓய்வு கொடுத்தால் 50 சதவீத திறன் அதிகரிக்குமாம்…! ஆய்வில் தகவல்!!

சிறிது கூட ஓய்வெடுக்க நேரமின்றி உழைப்பது ஒரு சிலருக்கு பணிச்சுமையினால் அமைகிறது. வேறு சிலர் அவ்வாறு உழைப்பதன் மூலம் அதிக திறனை வெளிப்படுத்த முடியும் என நினைத்து தாங்களாகவே உழைக்கின்றனர். பணிச்சுமைகள் இருந்தாலும், நாம் செய்யும்…

பணி ஓய்வு பெற்ற போலீஸ் மோப்ப நாய்க்கு மாலை அணிவித்து மரியாதை!!

திருச்சூர் கேரள போலீஸ் அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஜெனி கடந்த 2015-ம் ஆண்டு முதல் இடுக்கி மோப்பநாய் படையில் பணியாற்றியது. கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் துப்புதுலங்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் முக்கிய பங்கு வகித்தது.…

கார் ஏறி இறங்கியதில் குழந்தை பலி.. தாயாரின் கவனக்குறைவால் நொடிப்பொழுதில் அரங்கேறிய சோகம்!!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் ஃபீனிக்ஸ் பகுதிக்கு வடக்கே சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள காட்டன் உட் பகுதியில், ஒரு பெண் தனது காரை நகர்த்தும்போது எதிர்பாராத விதமாக காரில் சிக்கி அவரது 13 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. இது…

ஆந்திர சட்டசபை தேர்தலில் 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெறும்- அமைச்சர்…

ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா நேற்று நடந்த விழாவில் பேசியதாவது:- எங்கள் ஆட்சியில் தொழிலதிபர்களுடன் ரூ.13 லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் மாநிலத்திற்கு முதலீடுகளை…

சந்திரயான்-3: நிலவில் என்னென்ன ஆய்வுகளை மேற்கொள்ளும்? அதன் முக்கிய 10 கட்டங்கள் என்ன?…

சந்திரயான் 3 விண்கலத்தை வருகின்ற ஜூலை 14ஆம் தேதியன்று இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. நிலவில் சந்திரயான் 3 பத்திரமாகத் தரையிறங்குவதில் முக்கியமான பத்து கட்டங்கள் உள்ளன. இந்தப் பத்து கட்டங்களும் வெற்றிகரமாக நடந்தால்தான், சந்திரயான் 3 வெற்றிகரமாக…

‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ !! (மருத்துவம்)

உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது குறையும். எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப்…

வைரலாகும் எலான் மஸ்க்கின் குழந்தை பருவ புகைப்படம்!!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் சமூக வலைத்தளத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர். இந்நிலையில் எலான் மஸ்க்கின் குழந்தை பருவ புகைப்படத்தை டுவிட்டரில் கே10 என்ற பெயரில் ஒரு பயனர் பகிர்ந்துள்ளார். அந்த…

கிணற்று மண் சரிவில் சிக்கிய தமிழக தொழிலாளி பிணமாக மீட்பு- 50 மணி நேர போராட்டம்…

குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகா ராஜன்(வயது55). இவர் கடந்த 20 ஆண்டுகளாக கேரள மாநிலம் வெங்கானூர் நெல்லியறதலை பகுதியில் வசித்து கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே உள்ள…

ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்: சிரியாவில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் பலி!!

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் படை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். இவர்களை அழிக்க சிரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் தீவிர…

அமர்நாத் யாத்திரை சென்ற 20 தமிழர்கள் நடுவழியில் தவிப்பு- பலத்த மழை காரணமாக முகாமில் தங்கி…

ஜம்மு-காஷ்மீரில் இமய மலை பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்வது வழக்கம். அதேபோல் இப்போதும் யாத்திரை தொடங்கிய நிலையில் அங்கு பெய்து வரும் பலத்த மழை, நிலச் சரிவு,…

இந்திய இழுவைப் படகுகளை தடைசெய்ய தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் – மீனவ…

இந்தியா செல்லும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லைதாண்டிய இந்திய இழுவைப் படகுகளை தடை செய்யுமாறு தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் என யாழ். மாவட்ட கடற்தொழில் சங்கங்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்தன. யாழ்ப்பாணத்தில்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் !! (PHOTOS)

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் பிரதமருக்கான இக் கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில்…

யாழ்ப்பாணத்தில் ஒரு நிறுவனம் உள்பட 15 நாணயமாற்று நிறுவனங்களின் அனுமதி ரத்து!!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் நிபந்தனைகளுடன் இணங்கியொழுகாமையின் காரணமாக, யாழ்ப்பாணத்தில் ஒரு நாணயமாற்று நிறுவனம் உள்பட 15 நாணய மாற்றுநர்களின் நாணயப் பரிமாற்றல் அனுமதிப்…

வாழ்க்கையை விழுங்கும் ஆன்லைன் விளையாட்டும், சமூக வலைத்தளமும்: பிரிட்டனில் அழிந்து வரும்…

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகள் மக்களுக்கிடையேயான 'மனித' தொடர்பை குறைத்து வருவதாக பிரிட்டனில் 3000 பேரிடம் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான "லைஃப்சர்ச்" நடத்திய ஆய்வில் தெரிகிறது. அந்நாட்டு மக்களில் கிட்டத்தட்ட 10 பேரில்…

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல்: 697 வாக்கு சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு பலத்த…

மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று முன்தினம் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்லில் 61,636 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப் பதிவு நடைபெற்றது. ஓட்டுப்பதிவின் போது பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல்…

செனகலில் இருந்து புலம்பெயர்ந்தோர் 200 பேருடன் சென்ற படகு கேனரி தீவுகளுக்கு அருகே மாயம்!!

ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்தோர் 200 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன நிலையில், ஸ்பெயின் நாட்டின் மீட்புக் குழுவினர் அந்தப் படகை கேனரி தீவுகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் தேடிவருகின்றனர்.…