;
Athirady Tamil News

யாழில் இறந்தவரின் பெயரில் உறுதி முடிப்பு ; சட்டத்தரணி உள்ளிட்ட ஐவர் கைது!

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் இறந்தவரின் பெயரில் உறுதி முடித்து , காணி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சட்டத்தரணி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டுமடம் பகுதியில் உள்ள 6 பரப்பு காணி ஒன்றின் உரிமையாளர் கடந்த…

பூப்பந்தாட்ட போட்டியில் யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு முதலிடம்!!

அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையை பிரதிநித்துவப்படுத்தி பங்குபற்றிய உத்தியோகத்தர் ஆர்.நிஷாந் திறந்த தனிவீரர்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்தார். புதன்கிழமை(07) அன்று…

ஓட்டோ மீது மரம் சாய்ந்ததில் ஒருவர் பலி!!

இராகலை -புரூக்சைட் பகுதியில் இன்று (8) காலை வீதியில் பயணித்து கொண்டிருந்த ஓட்டோ மீது மரம் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இருந்து இராகலையை நோக்கி பயணித்து கொண்டிருந்த ஓட்டோ மீதே பாரிய மரம்…

நிர்வாண நிலையில் சடலம் மீட்பு!!

எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொட நீரோடையின் மேல்பகுதியில் நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் தொடர்பில் எஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

16 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை: 72 வயதானவர் கைது!!

16 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 72 வயதான வயோதிபர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சிறுமி…

மின் கட்டண அதிகரிப்பு அவசியம்!!

அடுத்த வருடம் முதல் 24 மணித்தியால மின்சார விநியோகத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள காரணத்தால், கட்டணத்தை அதிகரிக்காமல் தொடர் மின்சார விநியோகத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் தெரிவித்தார்.…

பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்!!

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான உத்தியாக 5.3 மில்லியன் இலங்கை மக்கள் ஏற்கெனவே உணவைத் தவிர்த்துக் கொண்டிருந்தாலும், இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் காலநிலையால் தூண்டப்பட்ட இயற்கை ஆபத்துகள் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றின்…

யாழில் ஹெரோயினுடன் பெண் கைது!!

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் 130 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 38 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை…

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடுகிறது!!

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடவுள்ளது. இன்று காலை கூட்டம் நடத்தப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பங்காளி அரசியல்…

வளி மாசடைதல் அதிகரிப்பு!!

கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 புள்ளிகளாக காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.…

சீனா உறுதியளித்தால் ஜனவரியில் IMF அனுமதி பெற முடியும்!!

டிசெம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புக்கான உறுதிமொழியை சீனா வழங்கினால், ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதியுதவிக்கான அனுமதியைப் பெற முடியும் என்று இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி…

போதைப் பொருள் பாவனை – அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் பற்றிய…

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடாத்தும் போதைப் பொருள் பாவனை அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு நாளை 09 ஆம்…

யாழ். குடாநாட்டில் திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.!! (PHOTOS)

யாழ். குடாநாட்டில் இன்று (07.12.2022) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர். படங்கள் - ஐ.சிவசாந்தன்…

எச்சரிக்கை – இதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறீங்களா? (கட்டுரை)

இருதயம் தொடர்பான உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு டிமென்ஷியா நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிமென்ஷியா என்பது நினைவாற்றல் மங்கும் நோயாகும். நினைவாற்றல் மங்குவது மற்றும் மூளை…

எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது !!

பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது நாளான நேற்றைய (06) உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, பண்டி உர விநியோக…

பிரித்தானியாவிடம் இருந்து ஒத்துழைப்பு!!

இலங்கை முன்னெடுத்து வரும் காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான உதவிகளை வழங்க பிரித்தானியா விருப்பம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை…

விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்!!

விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய கொள்கை உப குழுவின் செயற்குழுவில் கலந்துரையாடப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின்…

குழந்தைகளின் வயிற்று வலியில் கவனம் செலுத்துங்கள்!! (மருத்துவம்)

குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்து விட்டாலோ அவர்களை விடவும் பெற்றோர்கள் துடி துடித்து விடுவார்கள். குழந்தைகளால் தங்களுடைய பிரச்சினை என்னவென்று சரியாக சொல்ல முடியாது. இதனால் என்னவாக இருக்குமோ ஏதுவாக இருக்குமோ என ஒரு கணம் பயந்தே விடுவது தான்…

வெளிநாட்டு மோகத்தில் நீர்கொழும்பு முகவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த யாழ் இளைஞர்கள்!!

வெளிநாட்டுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் நீர்கொழும்பிலுள்ள முகவரொருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துபோன சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பாக இணையவழியூடாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக…

கார்த்திகை தீபத் திருவிழா-அம்பாறை மாவட்டம்!! (படங்கள், வீடியோ)

கார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புதன்கிழமை(7) இதையொட்டி இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை…

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு!!

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை அடங்கிய மகஜர் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று சாய்ந்தமருது…

தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட நகரக்…

யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் அவர்களின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட நகரக் குளம் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கலானது இன்றைய தினம் (07/12/2022) நாட்டப்பட்டது. இத்திட்டமானது மூன்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் -பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு மாற்றம்?…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல்…

மாணவர்களுக்கு கஞ்சா விற்பவர் கைது!!

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருளை விற்பனை செய்து வருபவர் என்கிற சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் வைத்து சந்தேகநபர் கைது…

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!!

அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கேற்ப சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைவடையக்கூடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி…

ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வர்த்தமானி!!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அடுத்த வருடம் மார்ச் 20 ஆம்…

பசிலின் பேச்சுக்கு இதுவே காரணம்!!

நாட்டில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு ஓடியொளிந்துகொண்டிருந்த பசில் ராஜபக்ஷ பொதுவெளியில் சுதந்திரமாக வந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு குற்றவாளியென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்…

சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில்!!

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், சுகயீனம் காரணமாக தேசிய வைத்தியசாலையில் இன்று (07) அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சிறிதம்ம…

மலையகம் 200; நிகழ்வுகளுக்கு தயாராகிறது இ​.தொ.கா!!

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து எதிர்வரும் 2023ஆம் ஆண்டுடன் இரு நூறு வருடங்களாகும் நிலையில், அதனை முன்னிட்டு 'மலையகம் 200' எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக…

யாழில். தாய்ப்பால் புரைக்கேறி 3மாத குழந்தை உயிரிழப்பு!!

தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை ஒன்று மரணம் அடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் நேற்று காலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது தொடர்பான…

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம்…

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் இன்றைய தினம் புதன்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின்…

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான சிவலிங்கம் பிரதிஸ்டை!! (PHOTOS)

சிவபூமி அறக்கட்டளையினால், செம்மணி பகுதியில் “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள்…

காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் சாத்தியம்!!

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 320 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை படிப்படியாக புயலாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த…