;
Athirady Tamil News

ஓட்டோ மீது மரம் சாய்ந்ததில் ஒருவர் பலி!!

0

இராகலை -புரூக்சைட் பகுதியில் இன்று (8) காலை வீதியில் பயணித்து கொண்டிருந்த ஓட்டோ மீது மரம் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இருந்து இராகலையை நோக்கி பயணித்து கொண்டிருந்த ஓட்டோ மீதே பாரிய மரம் வீழ்ந்துள்ளதுள்ளது.

இதன்போது ஓட்டோ சாரதி உள்ளிட்ட நால்வர் பயணித்துள்ளடன், 61 வயதான பி.எஸ்.மயில்வாகனம் உயிரிழந்துள்ளார்.

ஏனைய மூவரும் காயங்களுடன், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.