;
Athirady Tamil News
Daily Archives

2 February 2024

பணத்திற்காக தன்னைத் தானே திருமணம் செய்த பெண்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு மணமகள் தங்களை தாங்களே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுத் திருமணம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் கூட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணம் செய்யும்…

சுவிட்ஸர்லாந்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

சுவிட்ஸர்லாந்து வாழ் மக்கள் அங்கு அதிகரித்துவரும் மருத்துவம் தொடர்பான செலவுகள் குறித்து அதிகம் கவலைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு மக்களில் 80 சதவீதமானவர்கள் மருத்துவக் காப்பீட்டு தொகை அதிகரித்து வருவதே தங்களுக்கு கவலையை…

பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தம் எங்கிருந்து? எங்கு?

பல்வகைப்பட்ட காணப்படும் உலக நாடுகள் அனைத்தையும் தமது தேவைக் கேற்றவாறு எந்த நாட்டை அணி சேர்த்து, எந்த நாட்டை ஓரங்கட்டி, எந்த நாட்டைக் கையாண்டு, எந்த நாட்டை பயன்படுத்தி தத்தமக்கான நலன்களையும், வெற்றிகளையும் ஈட்டுவதற்காக நாடுகளை நாடுகளால்…

நான் எதற்காக அரசியல் கட்சி தொடங்கினேன்! நடிகர் விஜய் வழங்கியுள்ள விளக்கம்

தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தன்னுடைய புதிய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். அத்துடன்…

கிளிநொச்சி குடும்பஸ்தரை பலிவாங்கிய புகையிரதம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில், கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை புகையிரதம் மோதியுள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார்…

கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய்க்கு நாமல் கூறிய செய்தி

தென்னிந்திய நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்ததையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச, தனது டுவிட்டர் தளத்தில் இட்ட பதிவொன்றின் மூலமே குறித்த வாழ்த்து செய்தியை…

விலையில் மாற்றம் இல்லை ; லாப்ஸ் நிறுவனம்

இம்மாதம் உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி மாத விலை பெப்ரவரி மாதத்திற்கும் பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதெவேளை லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும்…

ரஷ்யாவிற்கு பேரிடி: உக்ரைனின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஏவுகணை கப்பல்

உக்ரைனின் தாக்குதலில் ரஷ்யாவின் ஏவுகணை கப்பலொன்று கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்தம் இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், யுத்தம் முடிவே இல்லாமல் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது. திடீர் தாக்குதல்…

இந்திய பாரம்பரிய நடனம்

https://www.youtube.com/watch?v=7Kz5Yw3ytks இந்தியாவின் 75 - ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களின் தொடர்சியாக யாழ் இந்தியத் துணைத் தூதரகமும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்திய கலைஞர்களின் இந்தியாவின் பாரம்பரிய…

வவுனியாவில் சந்தேகநபர் தப்பியோட்டம்: தேடுதல் தீவிரம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த சந்தேகநபர் தப்பி ஓடியதையடுத்து, அவரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபரே இவ்வாறு…

தினமும் 4 ஸ்பூன் மாதுளை சாப்பிடுங்க… கண்கூடாக தெரியும் அதிசயம்

மாதுளை பழத்தில் பல ஊட்டச்சத்துகள் உள்ளதால் இதை சாப்பிடுவது நம் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் தரும் என்பது எல்லாருக்குமே தெரிந்த விஷயம். மாதுளை பழத்தில் உள்ள வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை…

ஜேர்மனியில் முடங்கிய விமான சேவை : இலட்சக்கணக்கான பயணிகள் பாதிப்பு

ஜேர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தின் விளைவாக அங்கு விமான சேவைகள் முடங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக ஜேர்மனியின் Frankfurt, Berlin மற்றும் Munich உள்ளிட்ட 11 முக்கிய விமான…

ஞானவாபி மசூதி வளாகத்தில் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை: நீதிமன்ற உத்தரவு வெளியான சில மணி…

ஞானவாபி மசூதி வளாக நிலவறையில் இடம்பெற்றிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த சில மணி நேரத்துக்கு பின்பு புதன்கிழமை இரவு அங்கு பூஜை நடத்தப்பட்டதாக காசி விஸ்வநாதா் கோயில் அறக்கட்டளை தலைவா் தெரிவித்தாா். இந்த…

தொடரும் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் பெரும் அவதி

சுகாதாரத்துறையினரின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தங்களுக்கும்…

வவுனியாவில் அதிரடியில் இறங்கிய நகரசபை; ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபார நிலையங்கள் நகரசபையால் இன்று வெள்ளிக்கிழமை (02) அகற்றப்பட்டது. வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து கொரவப்பொத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி ஆகியவை…

தங்க நகை கொள்ளையில் 20 வருடங்களுக்குப் பின் மரண தண்டனை!

பெண் ஒருவரை கொலை செய்து தங்க நகைகளை அபகரித்த நபருக்கு 20 வருட விசாரணையின் பின் அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹசலக்க, உல்பத்தகம பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . எட்டு…

ஈரானிய இலக்குகள் மீது தாக்க அனுமதி அளித்தது அமெரிக்கா : உச்சகட்ட பதற்றம்

சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரானிய இலக்குகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கான திட்டங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் பல நாட்களுக்கு நடைபெறும்…

2024 இடைக்கால பட்ஜெட் உரை: பிரக்ஞானந்தாவை புகழ்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய அரசின் இடைக்கால பட்ஜெட் உரையில் செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார். இந்திய இடைக்கால பட்ஜெட் இந்தியாவில் ஓரிரு மாதங்களில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்றுமுன் தினம்…

யாழில். 15 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 15 கிலோ கஞ்சா போதைப் பொருளுடன் நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்து ,…

இறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவுறுத்தல்

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிறன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் யாவும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார். பொது…

பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; மாடியில் இருந்து விழுந்து மாணவன் உயிரிழப்பு

வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த போது துயரம்…

இம்ரான் இல்லத்திலேயே மனைவிக்கு புஷ்ராவுக்குச் சிறை

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுடன் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி புஷ்ரா பீபி, இம்ரானின் இல்லத்திலேயே சிறைவைக்கப்பட்டாா். பிரதமராக இருந்தபோது சவூதி அரேபிய பட்டத்து இளவரசா்…

9-14 வயது சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

‘கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பைத் தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயது வரையுடைய சிறுமிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும்’ என்று நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை இடைக்கால பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சா் நிா்மலா…

யாழில் துவிச்சக்கரவண்டியிலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயரிழப்பு

யாழில் துவிச்சக்கரவண்டியிலிருந்து விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (01.02.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த…

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த விசேட நடவடிக்கை – தென்மராட்சி அபிவிருத்தி…

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு கிராம சேவகர் பிரிவுகள் ஊடக விளிப்பு குழுக்களை அமைத்து பொலிசாரின் ஒத்துழைப்போடு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…

குழந்தை பிரசவித்த தாய் உயிரிழப்பு

யாழில் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். மாதகல் மேற்கை சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில்…

சர்வதேச ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தினால் “சவால் மிகு நேரங்களில் சமயங்களின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட கிருஸ்தவ கற்கைகளிலான இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு 01.02.2024, வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில்…

நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞான வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞான வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தாகத்தில் தவிக்கும் காசா சிறுவர்கள்

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு தேடி ஓடும் அதேவேளை குடிநீருக்குகூட மக்கள் போராடிவருகிறார்கள். தெற்கு காஸாவில் உள்ள பாலஸ்தீனக் சிறுவர்களுக்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தும் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர்…

இலங்கைக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு:வெளியான தகவல்

இலங்கைக்கு திரவமாக்கப்பட்ட எல்.என்.ஜி என்ற இயற்கை எரிவாயுவை வழங்க இந்தியா முன்மொழிந்துள்ளது. மின்சாரம் உற்பத்தி இலங்கையின் யுகதனவி மற்றும் சோபாதபாவி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய குறித்த முன்மொழிவு உதவும்…

அரிசி, மரக்கறி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்

எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகளை குறைக்கப்படவுள்ளது. அமைச்சரவையில் கலந்துரையாடி விலையை குறைப்பதற்கு தனியான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட…

கைத்தொலைபேசிகளூடான இரகசிய பணப்பரிமாற்றங்கள்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

போதைப்பொருள் கொள்வனவின் போது கையடக்கத் தொலைபேசி மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் முறைமையை கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில்…

நாடாளுமன்ற தேர்தலில் பெருவெற்றி : நாமல் வெளியிட்ட அறிவிப்பு

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை பொதுஜன பெரமுன மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளுமெனவும், தேர்தலில் கட்சி பெரு வெற்றிபெறும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் வெற்றியை நோக்கி கட்சியை முன்னெடுத்துச்…

56 நிமிஷங்களில் நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் உரை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6-ஆவது முறையாக வியாழக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரை சுருக்கமாக 56 நிமிஷங்களில் முடிவடைந்தது. பட்ஜெட் தாக்கல் தொடர்பான சுவாரசியமான அம்சங்கள் வருமாறு: மிக நீளமான பட்ஜெட் உரையை…