;
Athirady Tamil News
Monthly Archives

July 2025

இன்று இடம்பெற்ற கோரவிபத்து; 10 பேர் காயம்

அநுராதபரம் -திறப்பனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (19) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து…

உக்ரைன் புதிய பிரதமராக பெண் நியமனம்

உக்ரைனின் புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை உகரைனில் 2022 ஆம் ஆண்டு ரஷியாவுடனான போர் தொடங்கியதிலிருந்து பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத் தலைவர்கள்…

குருநாகல் சிசுவை தத்தெடுக்க விரும்பும் ஆயிரக்கணக்கானோர்; வெளிநாடுகளில் இருந்தும் அழைப்பு

குருநாகல், பரகஹதெனிய - சிங்கபுர பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவை தத்தெடுக்க, 1,000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி கனடா, அவுஸ்திரேலியா,…

இலங்கை வந்துள்ள நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா; அமைச்சருடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் இன்று (19) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளனர். இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் இலங்கையின் வளமான கலாச்சாரத்தை…

அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் ; பொலிஸ் நிலையத்தில் வெடி விபத்து

லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் நிலையத்தில் (அகாடமி) ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிஸ்கைலுஸ் மைய அகாடமி பயிற்சி நிலையத்தில், வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்திற்கான காரணம் இந்த விபத்தில் மூன்று பேர்…

தனியார் கல்வி நிலையத்தில் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டி

இன்று (19) காலை யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கல்வி…

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு துறவற விழா மானிப்பாயில் கோலாகலம்!

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா நிகழ்வுகள் புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ். மாவட்டச் செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம், அகில இலங்கை…

பெங்களூரு: மாரடைப்பால் பெண் போலீஸ் உள்பட 2 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் மாரடைப்பு தொடர்பான இறப்புகள் அதிகரித்து வரும் சம்பவங்கள், பொதுமக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் இதய பரிசோதனைக்காக குவிந்து வருகின்றனர். இதற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமாக இருக்கலாம்…

முன்னாள் எம்.பி.க்கள், ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் ரத்து: சட்டம் விரைவில் நிறைவேறும் –…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு நேற்றைய தினம்…

கலைஞர் கருணாநிதியின் மகன் காலமானார்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மு.கருணாநிதியின் மகன் மு.க முத்து(77) உடல்நலக்குறைவால் சென்னையில்(19) காலமானார்.…

கேரள செவிலியர் வழக்கு: உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள செய்தி

ஏமன் நாட்டவர் ஒருவரைக் கொலை செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் ஒருவரது தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ள விடயம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.…

ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ ; அச்சத்தில் மக்கள்

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் நகர் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாட்ரிட் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில்…

‘காஸாவில் ஆயிரக்கணக்கான வீடுகளை அழிக்கும் இஸ்ரேல்’

காஸாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருப்புக் கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு வெடிவைத்து தகா்த்து வருவதாக, அண்மைக் கால செயற்கைக்கோள் படங்களை மேற்கோள்காட்டி பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.…

சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்…

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது

பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து…

கத்தார் உதவியுடன்… 81 ஆப்கன் மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்தது முதல், 2-வது முறையாக, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆப்கன் மக்கள், தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் புகலிடம் தேடி தஞ்சமடைந்த 81 ஆப்கன் மக்களின் விண்ணப்பங்கள்…

வீதியால் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்

உறவினரின் வீட்டுக்கு வீதியால் நடந்து சென்ற சிறுவனைப் பின்னால் வந்த கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மேற்படி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று (18) மாலை…

பாகிஸ்தானில் கனமழையால் பஞ்சாப் சிறையில் வெள்ளம்! 700 கைதிகள் இடமாற்றம்!

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சிறையில் வெள்ளம் ஏற்பட்டு, 700-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப்…

தெஹிவளை துப்பாக்கிச் சூடு; பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பு தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று(18) நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக சிவப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசத்துடன் கைவிடப்பட்ட நிலையில்…

வெளிநாடொன்றில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது. இஸ்ரேலின்…

பிகாரில் மின்னல் பாய்ந்து 33 பேர் பலி !

பிகாரில் இந்த வாரத்தில் மின்னல் பாய்ந்ததில் 33 பேர் பலியாகினர். பிகார் மாநிலத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களகாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின்போது ஏற்படும் மின்னால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.…

யாழில் வீட்டிற்கு அஸ்திவாரம் வெட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் நேற்றையதினம் (18) வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்க்காக அஸ்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த போது…

தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!

தென் கொரியா நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், 2 பேர் பலியாகியதுடன், சுமார் 5,600 பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தென் கொரியாவில், தெற்கு சங்சியோங் மாகாணம் மற்றும் குவாங்சு நகரம் உள்ளிட்ட ஏராளமான…

இலங்கையில் பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத்…

இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரம்

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாகும் காரணத்தால், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை,…

யாழில் கோர விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சையில் இருந்த நபருக்கு நேர்ந்த சோகம்

யாழ். வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புலோலி, வல்லிபுரக்குறிச்சியைச் சேர்ந்த 71வயதுடைய…

பரோல் கைதியை மருத்துவமனைக்குள் புகுந்து சுட்டுக் கொன்ற கும்பல்.., வெளியான அதிர்ச்சி வீடியோ

பரோலில் வெளிவந்த கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்து கும்பல் ஒன்று சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான பீகார், பாட்னாவில் கொலைக் குற்றவாளியாக பரோலில் சந்தன் என்பவர் வெளியே வந்துள்ளார். இந்நிலையில்…

கலப்படத்தால் நடுவழியில் நின்ற பாதுகாப்பு வாகனம்! டாக்ஸியில் சென்ற ஈரான் அதிபர்!

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் பழுதானதால், அவர் டாக்ஸி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உள்நாட்டு ஊடகங்களில் நேற்று (ஜூலை 18) செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், அந்நாட்டின்…

டிரம்ப் நியமித்த புதிய தூதருக்கு மலேசியாவில் கடும் எதிர்ப்பு! போராட்டத்தில் மக்கள்! ஏன்?

அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த மலேசியாவுக்கான, புதிய அமெரிக்க தூதருக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் அமெரிக்க தூதரகத்தின் வாசலில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பன்முகக் கலாசாரம் மற்றும் பெரும்பான்மையான இஸ்லாமியர்களைக் கொண்ட மலேசியா…

ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் வாஸ்குலர் பரிசோதனைக்கு (vascular test) உட்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பரிசோதனைகளுக்கு பின்னர் ட்ரம்புக்கு பொதுவான நரம்பு நோய்…

செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

ஆப்பிரிக்க நாடுகளில், பிரான்ஸின் செல்வாக்குக் குறைந்து வரும் சூழலில், அதன் கடைசி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து பிரன்ஸ் படைகள் முற்றிலும் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவிலுள்ள அதன் முந்தைய காலனி நாடுகளில்,…

இலங்கையில் கைதான 21 இந்திய பிரஜைகள் ; பெரும் மோசடி செயல் அம்பலம்

இணையவழி மோசடியில் ஈடுபட்ட 21 இந்தியப் பிரஜைகள், இன்று குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின், புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சுற்றுலா விசாவின் மூலம் நாட்டிற்கு வந்து இந்த குழுவினர், விசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக…

மூவரின் DNA; பரம்பரைக்கே நோய் வராது

இங்கிலாந்தில் மூவரின் டி.என்.ஏவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குழந்தைகள், பரம்பரை நோயின்றி பிறப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தமுறையில் இங்கிலாந்தில் 8 குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு தாய் மற்றும்…

தில்லியில் ஒரே நாளில் 45 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் தலைநகரம்!

தில்லியில் ஒரே நாளில் சுமார் 45 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளுக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். தில்லியில் கடந்த சில நாள்களாக கல்வி நிலையங்கள் மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்படும்…