;
Athirady Tamil News

சைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு?..!

0

அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட ‘சைடஸ் கேடிலா’ நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலையை 265 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி இன்னும் தடுப்பூசி இயக்கத்தில் சேர்க்கப்படவில்லை. தடுப்பூசியின் 3 டோஸ்களுக்கு 1900 ரூபாய் என விலையை நிர்ணயித்து அரசுக்கு முன்மொழிந்துள்ளது. இதனையடுத்து தடுப்பூசியின் விலையை குறைக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதையடுத்து ஒரு டோஸ் விலையை ரூ.265 ஆக குறைக்க முன்வந்துள்ளதாகவும், விரைவில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.