;
Athirady Tamil News

யுத்தத்தால் பாதிப்படைந்த வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

0

யுத்தத்தால் பாதிப்படைந்த வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இன்று (19.12) இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக உயிரிழப்புக்களை சந்தித்த குடும்பங்கள், அங்கவீனராகிய குடும்பங்கள், சொத்துக்களை இழந்த குடும்பங்கள் என இழப்பீடு கோரியவர்களில் தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், யுத்தம் காரணமாக பாதிப்படைந்த 4 ஆலயங்களுக்கான இழப்பீடுகள் ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், அரச அதிகாரிகள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.