;
Athirady Tamil News

வடமாகாண மோட்டார் போக்குவரத்து நடமாடும் சேவை தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது!!

0

வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும், மத்திய அரசின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும் இணைந்து நாளை சனிக்கிழமையும்(09.4.2022), நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(10.4.2022) நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்த நடமாடும் சேவை தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சேவையின் பொருட்டு ஆவணங்களைக் கையளிக்க வேண்டியவர்கள் ஆவணங்களை அருகில் உள்ள பிரதேச செயலகங்களில் 28.4.2022 வரை கையளிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.