;
Athirady Tamil News

சிகரெட் சண்டையில் ஒருவர் கொலை !!

0

மாதம்பே – முகுனுவடவன, மஹகம பிரதேசத்தில் உள்ள கடை உரிமையாளர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நான்கு பேர் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது சிகரெட் இல்லை என கடையின் உரிமையாளர் கூறியதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, வாக்குவாதம் முற்றி கடை உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் அவர்கள் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த வர்த்தகர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.