;
Athirady Tamil News

திலிப் வெதஆராச்சியின் மகனுக்கு விளக்கமறியல் !!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதலாம் திகதி குறித்த இருவரும் தெற்கு அதிவேக வீதியின் பெதிகம நுழைவுப் பகுதியில் கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நேற்று (6) பொலிஸில் ஆஜரான நிலையில் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (7) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.