;
Athirady Tamil News

இன்று முதல் புதிய போக்குவரத்து சேவைகள் ஆரம்பம் !!

0

நாட்டில் இன்று முதல் புதிய பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பிலிருந்து கண்டி வரையில் அதிவேக சொகுசு ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பிலிருந்து காங்கேசன் துறை வரை பிரதி வெள்ளிக்கிழமைகளிலும், காங்கேசன் துறை முதல் கொழும்பு வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும் வார இறுதி ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரையும், அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரையும் அதிவேக சொகுசு ரயில் சேவையொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் பாடசாலை சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளமையினால் பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க சிசுசெரிய போக்குவரத்து திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று முதல் மேலும் 20 புதிய பஸ் சேவைகளை சிசுசெரிய திட்டத்திற்குள் உள்வாங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.