;
Athirady Tamil News

விரைவில் புதிய அரசியல் கூட்டணி !!

0

அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பத்து கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும் அரசாங்கத்தை முறையாக வழி நடத்துவதற்கும் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க உள்ளதாக சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியானது அரசாங்கம் செய்ய வேண்டியதையும் செய்யக்கூடாததையும் சுட்டிக்காட்டும். அதேபோல், இக்கூட்டணியானது நிபுணர்களுடன் கலந்துரையாடி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கத்துக்கு சரியான பாதையைக் காட்டும் எனவும் தெரிவித்தார்.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற 10 கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.இப் புதிய அரசியல் கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சில பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.