;
Athirady Tamil News

திருமண நிகழ்ச்சியின்போது சோகம்- சிலிண்டர் வெடித்து 4 பெண்கள் பலி..!!

0

உத்தரப் பிரதேசம் மாநிலம் விக்ரம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில், ஒரு சிறுமி, 3 பெண்கள் என நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 3 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். திருமணத்தின்போது சிலிண்டர் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, சிலிண்டரின் ரெகுலேட்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதால் சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.