;
Athirady Tamil News

கப்பல் வருகையில் மீண்டும் தாமதம் !!

0

ஜூலை 6 முதல் 8 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் என்று கூறப்பட்ட 3,724 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல், சீரற்ற வானிலை காரணமாக தாமதமாகவே நாட்டை வந்தடையும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம், இன்று (05) அறிவித்தது.

எதிர்பாராத வானிலை மாற்றம் மற்றும் கடல் கொந்தளிப்புக் காரணமாக கப்பல் தாமதமாகும் என லிட்ரோ அறிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்துக்கும் உலக வங்கிக்கும் இடையில் 100,000 மெற்றிக்தொன் எரிவாயுவை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த எரிவாயு ஏற்றுமதி கொண்டுவரப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.