;
Athirady Tamil News

வாரணாசியில் ரூ.1,774 கோடியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

0

உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்து விட்டது. நேற்று முன்தினத்துடன் 100 நாட்கள் ஆட்சி முடிவடைந்தது. இந்த கொண்டாட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று சொந்த தொகுதியான வாரணாசி வந்தடைந்தார். வாரணாசியில் நடைபெற்ற விழாவில், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் என மொத்தம் ரூ.1,774 கோடி மதிப்பிலான பணிகளை பிரதமர் தொடங்கி வைத்தார். விழாவில் உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.