;
Athirady Tamil News

இமாசலபிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் 3.5 ஆக பதிவு..!!

0

இமாசலபிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் நேற்று திடீர் நிலநடுக்கம் பதிவானது. இது ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவானது. காலை 5.40 மணிக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியானது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. லேசான இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. மாநில தலைநகரான சிம்லாவில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.