;
Athirady Tamil News

தாயாகிய தனித்துவம் – நூல் வெளியீட்டு விழா!!(PHOTOS)

0

மகப்பேற்று வைத்திய நிபுணர் Dr. கந்தையா குருபரன் எழுதிய தாயாகிய தனித்துவம் என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த புதன்கிழமை (07 /12/ 2022) யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது.

வைத்திய நிபுணர் சி. சிவன்சுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியகலாநிதி திருமதி ஜெ.கணேசமூர்த்தி முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.

நூலின் வெளியீட்டுரையை எழுத்தாளர் தாட்சாயணியும் நயப்புரைகளை வைத்திய நிபுணர் பிரேமகிருஷ்ணா, செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் ஆகியோரும் ஆற்றினர்.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா, யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லியனகே, மருத்துவபீட பீடாதிபதி , வைத்திய நிபுணர்கள் பேராசிரியர்கள்,மருத்துவர்கள் பணியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நூல் ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.