;
Athirady Tamil News

மக்கள் சேவைக்காக முழு மூச்சாக செயற்படுவோம்!!

0

தமது வேலைத்திட்டங்களை விமர்சிக்கும் கட்சி,புரட்சிகள் பற்றி பேசும் கட்சிக்கு கிடைக்கும் நன்கொடைகளை வைத்து கட்சி அலுவலகங்களை போஷிப்பதை விடுத்து தன்னை ஒத்த வேலைத்திட்டங்களை மக்களுக்காக நடைமுறைப்படுத்த ஏன் முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களுக்கு சேவை செய்வதற்கு முன்வருமாறு எதிர்க்கட்சிகளில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு பகிரங்கமாக சவால் விடுப்பதாகவும்,மக்கள் சேவைக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

´பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 62 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று பொல்பித்திகம தேசிய கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களால் நேற்று (04) அன்பளிப்புச் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.