;
Athirady Tamil News

தனிநபர் முற்பண வருமான வரி வசூல் அதிகரிப்பு!!

0

தனிநபர் முற்பண வருமான வரி வசூலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான தரவில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனவரி மாதத்தில் தனிநபர் முற்பண வருமான வரியாக 3106 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் 10,540 மில்லியன் வரை அந்த தொகை அதிகரித்துள்ளதுடன், மார்ச் மாதத்தில் 11,931 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதல் காலாண்டின் முதல் மூன்று மாதங்களில் தனிநபர் முற்பண வருமான வரியாக 25 ,577 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.