;
Athirady Tamil News

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட உதய் சிறுத்தை உயிரிழப்பு!!

0

பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியில் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடியபோது நமீபியா நாட்டின் 8 சிறுத்தை புலிகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார். தென் ஆப்பிரிக்காவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிறுத்தைகளை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து பிப்ரவரி 18ம் தேதி தென்ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் 12 சிறுத்தைகள் குவாலியருக்கு வரவழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட உதய் என்ற மற்றொரு சிறுத்தை, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளது. இதுதொர்பாக மாநில தலைமை வனப் பாதுகாவலர் (சிசிஎப்) ஜே.எஸ். சவுகான் நேற்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.