;
Athirady Tamil News

மண்சரிவு அபாய எச்சரிக்கை !!

0

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (29) பிற்பகல் 2.30 வரையில் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்தமுல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.