;
Athirady Tamil News

யாழ்ப்பாண பிரதேச செயலக பண்பாட்டு விழா!! (PHOTOS)

வடக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு கலைஞர்களுக்கான விருதும் கௌரவிப்பும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாதசுந்தரனும் சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர்
இராஜமல்லிகை சிவசுந்தரசர்மாவும் கௌரவ விருந்தினராக கலாபூஷணம் குருசுமுத்து இராயப்பு ஆகியோர் பங்கேற்றதுடன் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,யாழ் பிரதேச சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Comments are closed.