;
Athirady Tamil News

குரங்கு குட்டியை துடிக்க துடிக்க அடித்துக்கொன்ற வாலிபர்கள்!!

0

விலங்குகளிடம் பரிவு காட்டும் மனிதாபிமான மனிதர்கள் மத்தியில் ஈவு இரக்கம் இல்லாமல் ஒரு குரங்கு குட்டியை 2 வாலிபர்கள் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள பவுதான் மாவட்டம் தாவ்ரி கிராமத்திற்குள் ஒரு குரங்குகுட்டி வழி தவறி வந்தது. இதை பார்த்த 2 வாலிபர்கள் அந்த குட்டிக்குரங்கை கம்பால் சரமாரியாக தாக்கினார்கள். வாயில்லா அந்த ஜீவன் உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் வலி தாங்க முடியாமல் அலறியது. அது கதறி துடிப்பதை பார்த்தும் அந்த வாலிபர்களின் மனம் இளகவில்லை.

2 பேரில் ஒருவர் தொடர்ந்து அந்த குட்டிக்குரங்கை கம்பால் அடித்து சித்ரவதை செய்து கொண்டே இருந்தார். அடி தாங்க முடியாமல் அந்த குட்டிக்குரங்கு அப்படியே மயங்கியது. இருந்தபோதிலும் அந்த வாலிபர் விடவில்லை. குரங்கு குட்டியை ரோட்டில் அங்கும், இங்கும் தூக்கி போட்டபடி வந்தார். பின்னர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த குப்பை கிடங்கிற்கு அந்த குட்டிக்குரங்கை கொண்டு சென்று அங்குள்ள சாக்கடை நீரில் தூக்கி வீசினார்கள். மனிதாபிமானம் இல்லாமல் நடந்த இந்த கொடூர தாக்குதலில் அந்த குட்டிக்குரங்கு பரிதாபமாக உயிரை விட்டது.

இதோடு மட்டும் அந்த வாலிபர்கள் நின்று விடவில்லை. இந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இது வைரலாக பரவியது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் அடிப்படையில் போலீசார் அந்த 2 வாலிபர்கள் மீதும் பிராணிகள் வரை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.