;
Athirady Tamil News

யாழ்.பல்கலை மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்!!

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் திருநெல்வேலி பகுதியில் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது நேற்றைய தினம் சனிக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டின் தளபாடங்கள் மற்றும் ஜன்னல்கள் என்பவை உடைக்கப்பட்டுள்ளதுடன், வீட்டில் தங்கி இருந்த மாணவன் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.