;
Athirady Tamil News

நிர்க்கதி நிலையில் ஆப்கான் மக்கள் – யுனிசெப் வெளியிட்டுள்ள தகவல் !!

0

ஆப்கானிஸ்தானில் 3 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என யுனிசெப் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசியல் சூழல் காரணமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிற அதேசமயம், வெள்ளம், பஞ்சம் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், 64 சதவீத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன.

அத்துடன், ஆப்கானிஸ்தானில் தற்போது 1.5 கோடி மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லவும் பூங்கா, ஜிம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் அனுமதி இல்லை என்பதோடு, அரச வேலைகளிலிருந்து பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பெண்கள் பொதுவெளியில் முகத்தை மறைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தலிபான் அரசு பெண்கள் நடத்தும் அழகு நிலையங்களை மூட உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்காதாகும்.

இதுகுறித்து யுனிசெப், “என்ஜிஓ மற்றும் ஐ.நா. அமைப்புகளில் ஆப்கன் பெண்கள் பணிபுரிய தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

சமூக மற்றும் பொருளாதார செயல்பாட்டில் பெண்கள் பங்கேற்பது அவசியம்.

இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெண்கள், குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவது சிக்கலாக மாறியுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.