;
Athirady Tamil News

ராஜநாகத்தை சீண்டும் வாலிபர்கள்!!

0

சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும், அவற்றில் பாம்புகள் குறித்த வீடியோக்களை பயனர்கள் அதிகம் பார்ப்பார்கள். அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ராஜநாகத்தை வாலிபர்கள் 2 பேர் சீண்டும் காட்சிகள் பதற வைக்கிறது.

இன்ஸ்டாகிராமில் ‘@டி_ஸ்ரேஸ்தா10’ என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில் 2 இளைஞர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஒரு ராஜநாகத்தின் வாலை பிடித்து சீண்டுவது போன்ற காட்சிகள் உள்ளன. ஒரு வாலிபர் முதலில் ராஜநாகத்தின் வாலை பிடித்து இழக்கவும் அது அவரை கொத்த முயல்கிறது. அப்போது மற்றொரு வாலிபர் அந்த ராஜநாகத்தின் வாலை பிடித்து சீண்டுவது போல உள்ள காட்சிகள் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரீல்ஸ் வீடியோவுக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.