;
Athirady Tamil News

துல்ஹிரிய பிரதேசத்தில் பேருந்து விபத்து!!

0

வரகாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த குறித்த பேருந்து, எதிர்திசையில் பயணித்த சீமெந்து ஏற்றிச் சென்ற பிரிமோர் ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.