;
Athirady Tamil News

வர்த்தகர் கொலை – 3 சந்தேக நபர்கள் கைது!!

0

பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்து வர்த்தகர் ஒருவரை T-56 துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மூவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களனி கல்பொரல்ல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஐ.சஞ்சீவ என்பவரே கடந்த வருடம் மே மாதம் 20 ஆம் திகதி கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.