;
Athirady Tamil News

விரைவில் விவாதிக்கப்பட வேண்டும் !!

0

சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்த ஐக்கிய மக்கள் சக்தியானது, குறித்த பிரேரணை இவ்வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

குறித்த பிரேரணை தொடர்பான விவாதத்தை விரைவில் நடாத்த தமது கட்சி உந்துதலளிக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

விவாதத்தைத் தாமதிப்பதற்கான எந்தக் காரணமும் இல்லாததால் சீக்கிரமாக அது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இந்த பிரேரணை நாட்டின் ஒட்டு மொத்த சுகாதார துறையின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடே தவிர, வெறுமனே அமைச்சரின் மீதான கண்டனமல்ல” என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.