;
Athirady Tamil News

பயங்கரவாத தாக்குதல்களுக்கு உங்கள் நாட்டிற்குள்ளேயே விடை தேடுங்கள்: பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி!!

0

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பொதுமக்களும், ராணுவத்தினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

சென்ற மாதம் நடைபெற்ற ஒரு தாக்குதலில் 12 பாகிஸ்தான் நாட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான் அமைப்பின் ஒரு பிரிவான தெஹ்ரிக்-யே-தலிபான் பாகிஸ்தான் எனும் தீவிரவாத குழு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானுக்கெதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

“ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்; ஆனால் போதுமான நடவடிக்கைகளை அது எடுக்கவில்லை. இத்தகைய தாக்குதல்களை பாகிஸ்தான் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என பாகிஸ்தான் எச்சரித்தது.

இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் விமர்சித்துள்ளது. தலிபான் அரசாங்க செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இது குறித்து கூறியதாவது: “எங்கள் மண்ணை ஒரு போதும் நாங்கள் பயங்கரவாதத்திற்காக பயன்படுத்தவில்லை; பயன்படுத்த அனுமதிப்பதுமில்லை. பாகிஸ்தானில் மட்டும் ஏன் பயங்கரவாதம் வளர்கிறது? பட்ஜெட்டில் பெரும் பகுதியை பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த செலவு செய்தும் ஏன் பாகிஸ்தானால் அதில் வெற்றி பெற முடியவில்லை? எங்கள் மீது குற்றம் சாட்டாமல் விடையை பாகிஸ்தான் தங்கள் நாட்டிற்குள்ளேயேதான் தேட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.