;
Athirady Tamil News

11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0

தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் கொளுத்திய வெயிலைப்போல, கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானதை பார்க்க முடிந்தது. இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில், ‘கோமுகி அணை 7 செ.மீ., சித்தம்பட்டி 6 செ.மீ., தனிமங்கலம், கும்பகோணம், காட்டுமயிலூர், மேலூர், மேட்டுப்பட்டி, தல்லாகுளம், கொடைக்கானல் பகுதிகளில் தலா 5 செ.மீ. கமுதி, கிழாநிலை, சிங்கம்புனரி, உளுந்தூர்பேட்டை, வம்பன், திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ., தேவக்கோட்டை, மதுரை தெற்கு, பார்வூட், திருவிடைமருதூர், திருமயம், கல்லிக்குடி, மஞ்சளாறு, சத்தியார், தொண்டி, இடையபட்டி, பில்லிமலை எஸ்டேட், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ.’ உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.