;
Athirady Tamil News

கோவில் திருவிழாவில் போட்டி இளவட்ட கல்லை தூக்கி அசத்திய இளைஞர்கள்- இளம் பெண்கள் ஆரவாரம்!!

0

வில்லியனூர் அகரம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, உறியடி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கிராம இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இளவட்டக்கல்லை தூக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியை காண குழுமியிருந்த இளம் பெண்கள் முன்பு இளை ஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி ஆர்ப்பரித்தனர். இதனை கைத்தட்டி பார்த்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.