;
Athirady Tamil News

சூப்பர் மார்க்கெட்டில் கூடைக்குள் கிடந்த ராட்சத பாம்பு- வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

0

ராட்சத பாம்புகளை வனப்பகுதிகள், பூங்காக்களில் தவிர்த்து பொது இடங்கள் அல்லது வீடுகளில் கண்டால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் பெரிய வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்குள் ராட்சத பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

அங்குள்ள சியோக்ஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்குவதற்காக வாடிக்கையாளர் ஒருவர் சென்றார். அப்போது ஷாப்பிங் செய்வதற்காக கூடையை எடுத்தபோது அதில் சுமார் 6 அடி நீளமுள்ள ராட்சத பாம்பு கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் சத்தம் போட்டார். உடனே அங்கு வந்த ஊழியர்கள் வனத்துறை மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ராட்சத பாம்பை மீட்டு கொண்டு சென்றனர். அந்த பாம்பு அங்கு எப்படி வந்தது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளில் ஆய்வு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.