;
Athirady Tamil News

மாமியார், மருமகள் தகராறில் ராணுவ வீரர் உயிரோடு எரித்துக் கொலை- மனைவி வெறிச்செயல்!!

0

ஆந்திரா மாநிலம்,பூஜாரி வண்டல பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா (34). ஸ்ரீதர் 15 ஆண்டுகள் ராணுவத்தில் வேலை செய்து விட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்று வீட்டிற்கு வந்தார். இதற்கிடையே மம்தாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட வந்தது. ஸ்ரீதரிடம் அவரது தாயை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என மம்தா வற்புறுத்தினார். இதற்கு ஸ்ரீதர் எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீதர் மது குறித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஸ்ரீதர் மனைவியை சரமாரியாக தாக்கினார். பின்னர் ஸ்ரீதர் தன்னுடைய அறையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் ஸ்ரீதர் அறைக்கு சென்ற மம்தா அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அவர் தப்பிச் செல்வதை தடுக்க அறையின் கதவை பூட்டிவிட்டு தப்பி சென்றார். ஸ்ரீதரின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வலியால் அவர் அலறி துடித்தார்.

இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது ஸ்ரீதர் மீது தீ பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் ஸ்ரீதரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் ஸ்ரீதரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முடிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மம்தாவை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.