;
Athirady Tamil News

எலான் மஸ்க்குடன் தொடர்பு : மனைவியை விவாகரத்து செய்யும் கூகுள் இணை நிறுவுனர் !!

0

உலகில் முதல் நிலை பணக்காரரும் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க்குடன் தனது மனைவி தொடர்பு வைத்துள்ளாரரெனத் தெரிவித்து,கூகுள் இணை நிறுவுனர் செர்ஜி பிரின் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலகின் 9ஆவது மிகப்பெரும் பணக்காரராக கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் (வயது 50) இருந்து வருகிறார். இவருக்கு 118 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர் தனது முதல் மனைவியான வோஜ்சிஸ்கியை விவாகரத்து செய்துவிட்டு 2018 ஆம் ஆண்டு பிரபல வழக்கறிஞரான நிகோல் ஷானஹான் என்பவரை திருமணம் செய்தார்.இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகள் உள்ளார்.

எனினும் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டிலிருந்து பிரிந்து வாழ்கின்றனர். இவ்வாறு பிரிந்து வாழ்வதற்கும் தற்போது விவாகரத்து கோருவதற்கும் தனது மனைவி நிக்கோல் ஷானஹான் உலகின் முதல் நிலை பணக்காரரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்குடன் தொடர்பு இருந்ததே காரணம் என்று செர்ஜி பிரின் குற்றம் சாட்டி உள்ளார்.

எனினும் ஷானஹான் மற்றும் எலான் மஸ்க் இருவரும் அவரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் திகதி எலான் மஸ்க் தனது சமூக வலைதள பக்கத்தில், சர்ஜியும் நானும் நண்பர்கள். நானும் அவரும் விருந்தில் பங்கேற்று இருக்கிறோம் .

அவரது மனைவி நிகோலை 3 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே பார்த்துள்ளேன். அதுவும் அவர் பலருடன் இருக்கும்போது பார்த்திருக்கிறேன். அவருக்கும் எனக்கும் இடையே ரொமான்டிக்காக எதுவும் நடக்கவே இல்லை. என்று தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.