;
Athirady Tamil News

ஜனநாயகம் பேசிவரும் ஜனாதிபதி ஒடுக்குகிறார் !!

0

ஜனாதிபதி செல்லும் இடமெல்லாம் ஜனநாயகம் தொடர்பாக பேசிக்கொண்டு இவ்வாறு ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் எந்த வகையில் நியாயமானதாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற காடு பேணல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஐநா கூறுகின்றது. ஆனால் அரசாங்கமோ அதனை நீக்கி அதற்கு இணையான சட்டத்தை கொண்டுவருவதாக கூறுகின்றது. யுத்தம் இல்லாத நிலைமையில் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது நிலைமையில் அவசியமானது அல்ல. இதனால் இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. வர்த்தமானியில் பார்க்கும் போது இரண்டும் ஒன்றாகவே தெரிகின்றது. சுதந்திரமாக ஜனநாயக ரீதியில் போராடுவதை நிறுத்துவதற்கான செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. இதனை தமிழ், சிங்கள மக்கள் எதிர்க்கின்றனர்.

மீண்டும் அடக்குமுறைகளை கொண்டு வரும் சட்டமாகவே இது அமையும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார ரீதியில் பிரச்சினைகளுக்குள் இருக்கும் நேரத்தில் ஜனநாயக மரபுகளை ஒழிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.