;
Athirady Tamil News

உக்ரைனின் வெற்றியை உறுதி செய்வது நட்பு நாடுகளின் பொறுப்பு : லிதுவேனிய வெளியுறவு அமைச்சர் !!

0

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் வெற்றியை உறுதி செய்வது நட்பு நாடுகளின் பொறுப்பாகும் என லிதுவேனிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“உக்ரைன் வெற்றிபெறும் வரை யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், உக்ரைனால் ரஷ்யாவின் படையெடுப்பைத் தோற்கடித்து, நிலப்பகுதியைத் திரும்பப் பெற முடியாவிட்டால், “அது அனைவருக்கும் ஒரு புதிய புவிசார் அரசியல் பிரச்சினையை உருவாக்கும்.

உக்ரைனுக்கு மட்டுமல்ல, ரஷ்யாவின் எல்லையில் இருக்கும் நாடுகளும் இதில் சரிசனை செலுத்த வேண்டும்.

உக்ரைன் சில பகுதிகளை மீட்பதில் வெற்றியடைந்ததாகக் கூறியது. ஆனால் கீவ்வின் அதிகாரிகள், நாட்டின் எதிர்த்தாக்குதல் மெதுவாக முன்னேறி வருவதாக ஒப்புக்கொண்டனர்.

இது மிகவும் கடினமான போர். நாம் பொறுமையாக இருக்க வேண்டும். உக்ரைனால் வெற்றி பெற முடியும். எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.