;
Athirady Tamil News

சட்டவிரோத மதுபான போத்தல்கள் ஏல விற்பனை !!!

0

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 18 ஆயிரத்திற்கும் அதிக மதுபான போத்தல்களை ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.

வருடத்தின் ஆரம்பம் முதல் சேகரிக்கப்பட்ட சட்டவிரோத மதுபான போத்தல்கள், அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன என சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

இவற்றை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினால் ஏல நடவடிக்கை உட்படுத்தப்படவுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல்களை மதுவரி திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.