;
Athirady Tamil News

யாழில். 3 மாத குழந்தை உயிரிழப்பு!!

0

தாய்ப்பால் அருந்தி விட்டு , ஏனையில் உறங்கிய 03 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கி.ஹரிகரன் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

தாய் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தாய்ப்பால் கொடுத்து விட்டு , குழந்தையை ஏனையில் உறங்க வைத்துள்ளார். நீண்ட நேரமாக குழந்தை எழும்பாததால் , சந்தேகம் அடைந்து குழந்தையை எழுப்பிய போது , குழந்தை அசைவற்று இருந்துள்ளது.

அதனை அடுத்து , குழந்தையை சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.